இளவழகியின் பேட்டி இன்று காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். அலுவலகம் செல்லும் அவசரம் இருந்தாலும் பொறுமையாகப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அண்மையில் ஃப்ரான்ஸில் நடந்த உலகக் கோப்பைக்கான கேரம் போட்டியில் வெற்றி பெற்று சேம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருந்தார்.
அரை மணி நேரம் இருக்கையிலேயே அமரவைத்துவிட்டது அந்தப் பேட்டி. மீடியா வெளிச்சத்தில் பேசவே தடுமாறும் ஒரு சராசரி நடுத்தரவர்க்கத் தமிழ்ப் பெண்ணைப் பிரதிபலித்தார் இளவழகி.
பேட்டியின் போது புன்னகைக்க வைத்த ஒரு இடம், "வட இந்திய ரசிகர்கள் பொதுவாக தென் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள், குறிப்பாக தமிழ்நாட்டு வீரர்களுக்கு துளி கூட சப்போர்ட் செய்ய மாட்டார்கள்" என்று முதல் போட்டி டேராடுனில் நடந்த போது ஏற்பட்ட அனுபவத்தை தான் இப்போது இந்தியாவின் சார்பாக வென்ற ஒரு சேம்பியன் என்பதையும் மறந்து வெகுளியாகக் கூறியது.
பெருமைப்பட வைத்த ஒரு விஷயம் "என் தந்தை ஒரு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி, பெரும்பாலும் நன் அவருடன் தான் கேரம் பயிற்சி செய்வேன்" என்று கூறியது.
எத்தனை ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு உலக சேம்பியனுடன் கேரம் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்?
வியக்க வைத்த ஒரு இடம், "என்னுடைய முதல் டோர்னமென்ட் நான் எட்டாவது படிக்கும் போது நடந்தது, அதில் நான் தோல்வியடைந்து எட்டாவது இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது. ஆனால் அந்தத் தோல்விக்காக நான் அழவில்லை, அத்துடன் எந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் எனக்கு அழுகை வருவது இல்லை".
அவருடைய மன உறுதி உண்மையிலேயே வியக்க வைத்தது.
நெகிழ வைத்த ஒரு இடம், "வெற்றி பெற்றுத் தாயகம் திரும்பிய போது, எங்களை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த கூட்டத்தைப் பார்த்ததும் எனக்கு கண்கள் கலங்கி விட்டது". ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அங்கீகாரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைத்தது. க்ரிக்கெட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற பொதுவான ஆதங்கம் இவருக்கும் இருந்தது.
ஆனால் அவருக்கு இருந்த வேறொரு ஆதங்கத்தைப் பற்றிச் சொன்ன போது சற்று உள்ளத்தை அதிரத் தான் வைத்தது. "நான் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவள், அது சேரி என்பதாலோ என்னவோ எங்களுக்கு ஸ்பான்சர் செய்யவே யாருமே முன்வருவதில்லை" என்று கூறிய போது சமூக அவலத்தின் உண்மை முகத்தில் அறைந்தது.
அவருக்கு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கிடைத்த வேலைவாய்ப்பைப் பற்றி நன்றியுடனும், நெகிழ்ச்சியுடனும் கூறிய போது ஏனோ எனக்கு வருத்தம் தான் வந்தது.
நம் மண்ணில் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்வதை விட ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் அதிகம் உள்ளனர்.
இந்நாடு விளையாட்டுத்துறையில் முதலிடம் பெற வேண்டுமானால் அரசு நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஸ்பான்சர்களும் எல்லா விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து திறமையை மட்டுமே மதித்து ஊக்குவிக்க வேண்டும்.
Wednesday, March 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
VNormally all people will not see this kind of programs.number of people are very less for seeing this.those people also ,simply they will see and forget about that immediately.they are seeing for only time pass.among those,UNGAL PARVAI really KAZHUGHU PARVAI thaan.
KAZHUGHARRUKKU ORU SABAZZZ........
BYE RAJI
Mama ithe thaan Indian hockey kum natanthu iruku ... Nama team oru league match la.. 18 - 0 endra goal kanakkil vetri petranga... atharku namathu hockey board (Indian gov.)avarkaluku 18 rose koduthanga (kathula thaan)... Athe varathil namathu indian cricket team irku namathu BCCI 58 lak per player... athu poga innum pala salzhugaigal... Hockey team enna pannuvanga ... namaku thrupi vayela koduthutanga...
Post a Comment