Monday, March 10, 2008

தீர்க்கப்படாத வழக்குகள்

இன்று நாடாளும் மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் திரு. பரத்வாஜ், உச்சநீதிமன்றத்தில் 24 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.

அவற்றில் 15 வழக்குகள் 25 ஆண்டுகளுக்கு மேல் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளன.
உச்சநிதிமன்றத்தின் நிலையே இப்படி என்றால், உயர்நிதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களின் நிலையைப் பற்றி நாமே கணித்துக் கொள்ளலாம்.

அரசு தற்போது காலியாக இருக்கும் நீதியரசர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மேலும் பல புதிய நிதிபதி பதவிகளை உருவாக்க வேண்டும்.

நடமாடும் நீதிமன்றங்கள், அதிவேக நீதிமன்றங்கள் போன்ற அருமையான முயற்சிகளைப் போல மேலும் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

ஒவ்வொரு வழக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும், நீதிபதிகளின் நியமனத்தில் தாமதத்தைக் குறைக்க வேண்டும், நீதிபதிகளும் தங்களுடைய கடமைக்குப் பொறுப்புள்ளவர்களாக ஆக்க வேண்டும் (Accountability).

சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றும் கொண்டுவரப்பட வேண்டும்.

"தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி" என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருந்தால் தான் நாடு நாடாக இருக்கும். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நீதித்துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அரசின் தலையாய கடமை ஆகும். அதுவே தனிமனிதனுக்குச் சட்டத்தின் மேல் நம்பிக்கை பிறக்க வழிவகுக்கும்.

No comments: