காந்தியும் விடுதலையும்: பகுதி – II
1942 ஆகஸ்ட் 9-ம் நாள் காந்தி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே நசுக்கிவிட முடிவு செய்து காந்தியைக் கைது செய்தது அரசு.
அரசு, காந்தியோடு நிறுத்திக் கொள்ளாமல், அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்தது.
தலைவர்கள் கைது செய்யப்பட்டால் மக்களை ஒருங்கிணைத்துப் போராட ஆள் இருக்காது என்று எண்ணியது ப்ரிட்டிஷ் அரசு.
ஆனால் ....
நடந்தது வேறு.
"வெள்ளையனே வெளியேறு" என்று அழைக்கப்பட்ட அந்த இயக்கம் தன்னிச்சையாக மக்களால் நடத்தப்பட்டது. தலைவர்களின் கைதுக்கு மக்கள் பழி வாங்கினார்கள் என்றே சொல்லலாம்.
வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
அரசு அலுவலகங்களைக் கல்லெறிந்து தாக்குதல், ரயில் பாதைகளை அழித்தல், வெடிகுண்டு வீசுதல், கொள்ளையடித்தல் என்று மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது.
நம்மூர் காவல்துறையினர் இதற்கெல்லாம் கலங்குபவர்களா என்ன?
மக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர், முடியவில்லை என்றால் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு; அதுவும் முடியவில்லையா, விமானத்தின் மூலம் சுடுதல் அன்று தங்களுடைய பயிற்சி முழுவதையும் பயன்படுத்தி ஒரு வழியாக வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட 900 பேர் கொல்லப்பட்டனர், 60,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
"செய் அல்லது செத்துமடி" என்பதை முழக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் எதையும் செய்யாமலும் செத்துமடியாலும் ஒரு மிகப்பெரிய வன்முறை என்ற அளவில் முடிந்து போனது;
அல்லது காவல்துறையினரால் கடுமையாக அடக்கப்பட்டது.
இப்பவும் ப்ரிட்டன் அரசு எந்தவிதப் போராட்டத்தையும் சமாளிக்கத் தயாராக இருந்ததே தவிர இந்தியாவிற்கு விடுதலை தர வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
1943-ம் ஆண்டு ஃபிப்ரவரியில் காந்தி சிறையில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார் (அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான்).
அரசின் அடக்குமுறையால் நொந்து போயிருந்த மக்கள் மீண்டும் போராட்ட "மூடுக்கு" வந்து விட்டனர்.
ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தன.
ஒரு வழியாக 1944ம் ஆண்டு காந்தியடிகள் மருத்துவநிலையைக் காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டார்.
அடுத்த சில மாதங்கள் எந்தப்போராட்டமும் குறிப்பிடத்தகுந்த அளவில் நடைபெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மக்கள் எப்போதும் போல் போராடத்தயாராக இருந்தனர்.
அரசும் இந்தியத் தலைவர்களை சிம்லா மாநாட்டில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
இதே நேரத்தில் தான் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ரானுவம், ஜப்பானிய ரானுவத்துடன் சேர்ந்து இந்தியாவின் கிழக்கு எல்லைக்கு வந்து சேர்ந்தது.
இன்னும் கொஞ்ச நாளில் ஜப்பானுடன் சேர்ந்து இந்தியாவை ப்ரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை வந்த போது தான் உலக வரலாறு நிறைய மாற்றங்களைக் காணத்தொடங்கியது.
போர் அமெரிக்கக் கூட்டுப்படைக்கு ஆதரவான திசையில் திரும்ப ஆரம்பித்தது. சோவியத் யூனியன் ஜெர்மனியைத் திருப்பித் தாக்க ஆரம்பித்தது.
1945 ஜூலை வாக்கில் சோவியத் படை ஜெர்மனியை முற்றுகையிட்டது. தற்கால வரலாற்றின் பெரும் பிழையான நிகழ்வான "அணுகுண்டு தாக்குதல்" ஜப்பான் மீது அமெரிக்காவால் நடத்தப்பட்டது.
அதை நாம் "ஹிரோஷிமா நாகாசாகி படுகொலை" என்று அழைப்போம். அந்தப்படுகொலைக்குப் பின்னர் ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது. ஜெர்மனியை ரஷ்யப் படைகள் முற்றிலுமாகத் தோற்கடித்தன.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது (கோடிக்கணக்கான மக்களின் குருதியை உறிஞ்சிக்குடித்த பிறகு தான்).
ஜூன் 25 1945-ல் சிம்லா மாநாடு நடைபெற்றது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் ப்ரிட்டன் அரசு தன்னுடைய நிலையிலிருந்து ஓரளவு இறங்கி வந்திருந்தது.
அதுவும் முழு விடுதலை அல்ல.
வைசிராய் மற்றும் தலைமை ரானுவ தளபதி தவிர அனைவரும் இந்தியர்களால் ஆன ஒரு அரசு ஏற்படுத்தப் படும் என்ற அறிவிப்பு இருந்தது.
ஆனால் ஜின்னா இடைக்கால அரசில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாக மட்டும் இருக்க வேண்டும் அன்று அறிவிக்க சிம்லா மாநாடு தோல்வியில் முடிந்தது.
அவர் அவ்வாறு நினைக்கக் காரணம் இந்துத் தலைவர்கள் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்கள் சரி வர பிரதிநிதித்துவம் பெற முடியாது என்று நம்பியது தான்.
இதே நேரத்தில் ப்ரிட்டனில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்தியாவின் மீது அனுதாபம் கொண்ட க்ளெமென்ட் அட்லீ பிரதமரானார்.
அவர் இந்திய விடுதலையை எப்போதுமே ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1946-ல் பிரதமர் அட்லீ காபினட் குழு ஒன்றை ஏற்படுத்தினார். அக்குழுவின் நோக்கம் இந்தியாவில் கூடிய விரைவில் சுய ஆட்சி ஏற்பட வழி செய்வது ஆகும்.
இந்த அறிவிப்புக்கு முந்திய மாதம் வரை ப்ரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவிற்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை; அவர்கள் போரில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது கூட விடுதலை அளிக்க மனம் வரவில்லை.
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மக்களின் கடுமையான போராட்டத்தின் போது கூட விடுதலை எண்ணம் வரவில்லை.
இவ்வளவு ஏன் பம்பாயிலும் கராச்சியிலும் நடைபெற்ற ராயல் இந்திய கடற்படை (Royal Indian Navy) வீரர்களின் கலவரத்தின் போது கூட வராத எண்ணம் எந்த விதப் போராட்டமோ, கலவரமோ இல்லாத சூழ்நிலையில் திடீரென்று காபினெட் மிஷன் ஏன் அறிவிக்கப்பட்டது.
ஒரு வேளை இந்தியர்கள் விடுதலையைப் போராடிப் பெறவில்லை, மாறாக ப்ரிட்டனால் தரப்பட்டது என்ற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவா என்று தெரியவில்லை.
காபினட் குழு தன்னுடைய அறிக்கையை மே மாதம் 16-ம் நாள் அறிவித்தது. ஒருங்கிணைந்த இந்தியா ஒன்றை இக்குழு பரிந்துரைத்தது. சுதேச மன்னர்களின் பகுதிகள் பின்னாளில் இணைந்து கொள்ளலாம். உடனடியாக ஒரு இடைக்கால அரசு ஏற்படுத்தி அரசியலமைப்பை இயற்றும் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.
முஸ்லீம் லீக் எதிர்பார்த்த பாகிஸ்தான் தொடர்பான வாய்ப்பு எதுவும் இல்லாததால் ஜின்னா இடைக்கால அரசில் லீக் கலந்து கொள்ளாது என்று அறிவித்தார்.
அத்துடன் ஆகஸ்ட் 16ம் நாளை "Direct Action Day" ஆக அறிவித்தார். நேரடி செயலாக்க நாள் என்கிற " Direct Action Day " யின் உண்மையான பொருள் கல்கத்தாவில் தெரிந்தது. அன்று நடைபெற்ற முஸ்லிம் - இந்து கலவரத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
எங்கும் மரண ஓலம், பிணங்கள், நெருப்பு, புகை.
நிலைமை மோசமாக ஆரம்பித்தது. இந்நிலையில் 1946 செப்டெம்பர் 2-ம் நாள் இடைக்கால அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.
ஆம்... முழுக்க முழுக்க இந்தியர்களால் நடத்தப்படப் போகிற முதல் அரசு. (வைசிராயும், ரானுவ தளபதியும் ப்ரிட்டானியர்கள்).
ஆனால் ஜின்னா இந்த நாளை துயர நாளாக அறிவித்தார்
பின்னர் இடைக்கால அரசில் லீக் பங்கேற்றது. ஆனால் அரசியலமைப்பை இயற்றும் குழுவில் இடம் பெற மறுத்தது. ப்ரிட்டிஷ் அரசோ, லீகின் பங்களிப்பு இல்லாத அரசியலமைப்பை ஏற்க முடியாது என்று அறிவித்தது. மேலும் லீகின் பிடிவாத அனுகுமுறையால் இடைக்கால அரசு செயல்பட முடியாமல் ஆனது. (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகை உணர்வும் வளர ஆரம்பித்தது)
இந்நிலையில் தான் இங்கிலாந்திலிருந்து அந்த அறிவிப்பு வந்தது. 1948 ஜூனுக்குள் இந்தியாவுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று அட்லீ அறிவித்தார். அந்த வேலையை முடிக்க சிறப்பு வைசிராயாக மவுன்ட்பேட்டன் அறிவிக்கப்பட்டார்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பொது மக்கள் முழு வேகத்தில் அரசை எதிர்த்துப் போராடிய போதெல்லாம் பணியாத அரசு, தங்களுடைய கடற்படையினரே கலகம் செய்த போது பணிந்துவிடாமல் அடக்கிய அரசு, இப்போது ஒற்றுமையில்லாமல் தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டிருக்கிற பொழுதில், இன்னும் சொல்லப் போனால் தங்களுடைய அரசுக்கு மக்களிடமிருந்து அவ்வளவு அபாயம் இல்லாத தருணத்தில் ஏன் ப்ரிட்டன் விடுதலை கொடுக்க முன்வர வேண்டும்?.
நம்முடைய விடுதலை நாம் பள்ளிக்கூடத்தில் படித்தது போல கடுமையான போராட்டத்தின் விளைவால் ப்ரிட்டன் நிர்வாகத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் தரப்பட்டதல்ல என்றும் தோன்றியது
போரினால் ஏற்பட்ட பொருள் மற்றும் மனித இழப்பு காரணமாக இன்னும் வேறொரு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது லாபமிருக்காது என்று நினைத்து விடுதலை தந்தார்களா என்று தெரியவில்லை.
ஆனால் இதே நேரத்தில் இந்த உலகம் முழுதும் காலணி ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளும் மனநிலையும் தோன்றின என்பதை மறுக்க முடியாது.
ஆசியாவில் உள்ள அனைத்து காலணி நாடுகளும் 1945 - 1950 க்குள் விடுதலை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கெல்லாம் காந்தி போல ஒரு தலைவர் இதுவரை முன்னிறுத்தப்படவில்லை.
அனைத்து நாடுகளும் விடுதலை பெற்றதென்னவோ வலு மிகுந்த ப்ரிட்டிஷ் அரசிடமிருந்து தான். ஆனால் மற்ற நாடுகள் எல்லாம் காந்தி போன்ற பெரிய தலைவர்கள் இல்லாமல் விடுதலை பெற்றன.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இவ்வாறு முடிவு செய்ய வேண்டியுள்ளது:
ப்ரிட்டனைப் பொறுத்தவரை எல்லா காலனி நாடுகளும் அடிமை நாடுகள் தான்.
எந்த நாட்டில் எவ்வளவு பெரிய போராட்டம் வெடித்தாலும் அதைச் சமாளிக்க அவர்களால் முடியும் (சமாளித்தும் இருக்கிறார்கள்),
1945க்குப் பிறகு உலகம் முழுதுமே எழுந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மனநிலையும், போருக்கு முன்பு வரை உலகின் தலைவனாக இருந்த ப்ரிட்டன் போருக்குப் பின்னால் அந்த இடத்தை அமெரிக்காவிடமும், ரஷ்யாவிடமும் இழந்ததோடு பொருளாதார ரீதியாக சந்தித்த இழப்புகளும் ப்ரிட்டனை தன்னுடைய நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தூண்டியிருக்கலாம்.
மிக மிக முக்கியமாக ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் மக்களுக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுப்பதும் அவர்களை ஆள்வதும் தங்களுடைய கடமை என்ற தங்களுடைய எண்ணம் முட்டாள்த்தனமானது என்று ப்ரிட்டானியர்கள் உணர்ந்திருக்கலாம்.
மொத்தத்தில் நம்முடைய தலைவர்கள் மக்களை ஒருங்கிணைத்துப் போராடினார்கள், மக்களும் துணிவுடன் அரசை எதிர்த்து நின்றார்காள், ஆனால் இவை விடுதலை பெறப் போதுமானதாக இல்லை.
எனவே நமக்கு மற்ற ஆசிய நாடுகளைப் போலவே விடுதலை தரப்பட்டது என்று முடிவு செயலாம்.
அதே நேரத்தில் போராடி விடுதலை பெறுவது என்றால் என்ன என்று அமெரிக்க விடுதலை வரலாற்றைப் படித்தால் புரியும். அங்கே அவர்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை, அரசுக்கு எதிராக கோஷம் போடவில்லை, ஆயுதம் தூக்கினார்கள்; வெற்றி பெற்றார்கள். அது தான் உண்மையான விடுதலைப் போராட்ட வரலாறு.
நம்முடைய விடுதலை "கொடுக்கப்பட்டது" தானே தவிர "எடுக்கப்பட்டது இல்லை" என்கிற வலி தரக்கூடிய உண்மையை நாம் வேதனையுடன் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
உங்களில் சிலருக்கு இந்தப் பதிவில் சொல்லப்பட்ட கருத்துகளுடன் முரண்பாடு இருக்கலாம், தங்களுடைய மாறுபட்ட கருத்துகளை வரவேற்கிறேன்......
1942 ஆகஸ்ட் 9-ம் நாள் காந்தி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே நசுக்கிவிட முடிவு செய்து காந்தியைக் கைது செய்தது அரசு.
அரசு, காந்தியோடு நிறுத்திக் கொள்ளாமல், அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்தது.
தலைவர்கள் கைது செய்யப்பட்டால் மக்களை ஒருங்கிணைத்துப் போராட ஆள் இருக்காது என்று எண்ணியது ப்ரிட்டிஷ் அரசு.
ஆனால் ....
நடந்தது வேறு.
"வெள்ளையனே வெளியேறு" என்று அழைக்கப்பட்ட அந்த இயக்கம் தன்னிச்சையாக மக்களால் நடத்தப்பட்டது. தலைவர்களின் கைதுக்கு மக்கள் பழி வாங்கினார்கள் என்றே சொல்லலாம்.
வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
அரசு அலுவலகங்களைக் கல்லெறிந்து தாக்குதல், ரயில் பாதைகளை அழித்தல், வெடிகுண்டு வீசுதல், கொள்ளையடித்தல் என்று மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது.
நம்மூர் காவல்துறையினர் இதற்கெல்லாம் கலங்குபவர்களா என்ன?
மக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர், முடியவில்லை என்றால் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு; அதுவும் முடியவில்லையா, விமானத்தின் மூலம் சுடுதல் அன்று தங்களுடைய பயிற்சி முழுவதையும் பயன்படுத்தி ஒரு வழியாக வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட 900 பேர் கொல்லப்பட்டனர், 60,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
"செய் அல்லது செத்துமடி" என்பதை முழக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் எதையும் செய்யாமலும் செத்துமடியாலும் ஒரு மிகப்பெரிய வன்முறை என்ற அளவில் முடிந்து போனது;
அல்லது காவல்துறையினரால் கடுமையாக அடக்கப்பட்டது.
இப்பவும் ப்ரிட்டன் அரசு எந்தவிதப் போராட்டத்தையும் சமாளிக்கத் தயாராக இருந்ததே தவிர இந்தியாவிற்கு விடுதலை தர வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
1943-ம் ஆண்டு ஃபிப்ரவரியில் காந்தி சிறையில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார் (அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான்).
அரசின் அடக்குமுறையால் நொந்து போயிருந்த மக்கள் மீண்டும் போராட்ட "மூடுக்கு" வந்து விட்டனர்.
ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தன.
ஒரு வழியாக 1944ம் ஆண்டு காந்தியடிகள் மருத்துவநிலையைக் காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டார்.
அடுத்த சில மாதங்கள் எந்தப்போராட்டமும் குறிப்பிடத்தகுந்த அளவில் நடைபெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மக்கள் எப்போதும் போல் போராடத்தயாராக இருந்தனர்.
அரசும் இந்தியத் தலைவர்களை சிம்லா மாநாட்டில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
இதே நேரத்தில் தான் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ரானுவம், ஜப்பானிய ரானுவத்துடன் சேர்ந்து இந்தியாவின் கிழக்கு எல்லைக்கு வந்து சேர்ந்தது.
இன்னும் கொஞ்ச நாளில் ஜப்பானுடன் சேர்ந்து இந்தியாவை ப்ரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை வந்த போது தான் உலக வரலாறு நிறைய மாற்றங்களைக் காணத்தொடங்கியது.
போர் அமெரிக்கக் கூட்டுப்படைக்கு ஆதரவான திசையில் திரும்ப ஆரம்பித்தது. சோவியத் யூனியன் ஜெர்மனியைத் திருப்பித் தாக்க ஆரம்பித்தது.
1945 ஜூலை வாக்கில் சோவியத் படை ஜெர்மனியை முற்றுகையிட்டது. தற்கால வரலாற்றின் பெரும் பிழையான நிகழ்வான "அணுகுண்டு தாக்குதல்" ஜப்பான் மீது அமெரிக்காவால் நடத்தப்பட்டது.
அதை நாம் "ஹிரோஷிமா நாகாசாகி படுகொலை" என்று அழைப்போம். அந்தப்படுகொலைக்குப் பின்னர் ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது. ஜெர்மனியை ரஷ்யப் படைகள் முற்றிலுமாகத் தோற்கடித்தன.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது (கோடிக்கணக்கான மக்களின் குருதியை உறிஞ்சிக்குடித்த பிறகு தான்).
ஜூன் 25 1945-ல் சிம்லா மாநாடு நடைபெற்றது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் ப்ரிட்டன் அரசு தன்னுடைய நிலையிலிருந்து ஓரளவு இறங்கி வந்திருந்தது.
அதுவும் முழு விடுதலை அல்ல.
வைசிராய் மற்றும் தலைமை ரானுவ தளபதி தவிர அனைவரும் இந்தியர்களால் ஆன ஒரு அரசு ஏற்படுத்தப் படும் என்ற அறிவிப்பு இருந்தது.
ஆனால் ஜின்னா இடைக்கால அரசில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாக மட்டும் இருக்க வேண்டும் அன்று அறிவிக்க சிம்லா மாநாடு தோல்வியில் முடிந்தது.
அவர் அவ்வாறு நினைக்கக் காரணம் இந்துத் தலைவர்கள் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்கள் சரி வர பிரதிநிதித்துவம் பெற முடியாது என்று நம்பியது தான்.
இதே நேரத்தில் ப்ரிட்டனில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்தியாவின் மீது அனுதாபம் கொண்ட க்ளெமென்ட் அட்லீ பிரதமரானார்.
அவர் இந்திய விடுதலையை எப்போதுமே ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1946-ல் பிரதமர் அட்லீ காபினட் குழு ஒன்றை ஏற்படுத்தினார். அக்குழுவின் நோக்கம் இந்தியாவில் கூடிய விரைவில் சுய ஆட்சி ஏற்பட வழி செய்வது ஆகும்.
இந்த அறிவிப்புக்கு முந்திய மாதம் வரை ப்ரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவிற்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை; அவர்கள் போரில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது கூட விடுதலை அளிக்க மனம் வரவில்லை.
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மக்களின் கடுமையான போராட்டத்தின் போது கூட விடுதலை எண்ணம் வரவில்லை.
இவ்வளவு ஏன் பம்பாயிலும் கராச்சியிலும் நடைபெற்ற ராயல் இந்திய கடற்படை (Royal Indian Navy) வீரர்களின் கலவரத்தின் போது கூட வராத எண்ணம் எந்த விதப் போராட்டமோ, கலவரமோ இல்லாத சூழ்நிலையில் திடீரென்று காபினெட் மிஷன் ஏன் அறிவிக்கப்பட்டது.
ஒரு வேளை இந்தியர்கள் விடுதலையைப் போராடிப் பெறவில்லை, மாறாக ப்ரிட்டனால் தரப்பட்டது என்ற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவா என்று தெரியவில்லை.
காபினட் குழு தன்னுடைய அறிக்கையை மே மாதம் 16-ம் நாள் அறிவித்தது. ஒருங்கிணைந்த இந்தியா ஒன்றை இக்குழு பரிந்துரைத்தது. சுதேச மன்னர்களின் பகுதிகள் பின்னாளில் இணைந்து கொள்ளலாம். உடனடியாக ஒரு இடைக்கால அரசு ஏற்படுத்தி அரசியலமைப்பை இயற்றும் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.
முஸ்லீம் லீக் எதிர்பார்த்த பாகிஸ்தான் தொடர்பான வாய்ப்பு எதுவும் இல்லாததால் ஜின்னா இடைக்கால அரசில் லீக் கலந்து கொள்ளாது என்று அறிவித்தார்.
அத்துடன் ஆகஸ்ட் 16ம் நாளை "Direct Action Day" ஆக அறிவித்தார். நேரடி செயலாக்க நாள் என்கிற " Direct Action Day " யின் உண்மையான பொருள் கல்கத்தாவில் தெரிந்தது. அன்று நடைபெற்ற முஸ்லிம் - இந்து கலவரத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
எங்கும் மரண ஓலம், பிணங்கள், நெருப்பு, புகை.
நிலைமை மோசமாக ஆரம்பித்தது. இந்நிலையில் 1946 செப்டெம்பர் 2-ம் நாள் இடைக்கால அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.
ஆம்... முழுக்க முழுக்க இந்தியர்களால் நடத்தப்படப் போகிற முதல் அரசு. (வைசிராயும், ரானுவ தளபதியும் ப்ரிட்டானியர்கள்).
ஆனால் ஜின்னா இந்த நாளை துயர நாளாக அறிவித்தார்
பின்னர் இடைக்கால அரசில் லீக் பங்கேற்றது. ஆனால் அரசியலமைப்பை இயற்றும் குழுவில் இடம் பெற மறுத்தது. ப்ரிட்டிஷ் அரசோ, லீகின் பங்களிப்பு இல்லாத அரசியலமைப்பை ஏற்க முடியாது என்று அறிவித்தது. மேலும் லீகின் பிடிவாத அனுகுமுறையால் இடைக்கால அரசு செயல்பட முடியாமல் ஆனது. (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகை உணர்வும் வளர ஆரம்பித்தது)
இந்நிலையில் தான் இங்கிலாந்திலிருந்து அந்த அறிவிப்பு வந்தது. 1948 ஜூனுக்குள் இந்தியாவுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று அட்லீ அறிவித்தார். அந்த வேலையை முடிக்க சிறப்பு வைசிராயாக மவுன்ட்பேட்டன் அறிவிக்கப்பட்டார்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பொது மக்கள் முழு வேகத்தில் அரசை எதிர்த்துப் போராடிய போதெல்லாம் பணியாத அரசு, தங்களுடைய கடற்படையினரே கலகம் செய்த போது பணிந்துவிடாமல் அடக்கிய அரசு, இப்போது ஒற்றுமையில்லாமல் தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டிருக்கிற பொழுதில், இன்னும் சொல்லப் போனால் தங்களுடைய அரசுக்கு மக்களிடமிருந்து அவ்வளவு அபாயம் இல்லாத தருணத்தில் ஏன் ப்ரிட்டன் விடுதலை கொடுக்க முன்வர வேண்டும்?.
நம்முடைய விடுதலை நாம் பள்ளிக்கூடத்தில் படித்தது போல கடுமையான போராட்டத்தின் விளைவால் ப்ரிட்டன் நிர்வாகத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் தரப்பட்டதல்ல என்றும் தோன்றியது
போரினால் ஏற்பட்ட பொருள் மற்றும் மனித இழப்பு காரணமாக இன்னும் வேறொரு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது லாபமிருக்காது என்று நினைத்து விடுதலை தந்தார்களா என்று தெரியவில்லை.
ஆனால் இதே நேரத்தில் இந்த உலகம் முழுதும் காலணி ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளும் மனநிலையும் தோன்றின என்பதை மறுக்க முடியாது.
ஆசியாவில் உள்ள அனைத்து காலணி நாடுகளும் 1945 - 1950 க்குள் விடுதலை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கெல்லாம் காந்தி போல ஒரு தலைவர் இதுவரை முன்னிறுத்தப்படவில்லை.
அனைத்து நாடுகளும் விடுதலை பெற்றதென்னவோ வலு மிகுந்த ப்ரிட்டிஷ் அரசிடமிருந்து தான். ஆனால் மற்ற நாடுகள் எல்லாம் காந்தி போன்ற பெரிய தலைவர்கள் இல்லாமல் விடுதலை பெற்றன.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இவ்வாறு முடிவு செய்ய வேண்டியுள்ளது:
ப்ரிட்டனைப் பொறுத்தவரை எல்லா காலனி நாடுகளும் அடிமை நாடுகள் தான்.
எந்த நாட்டில் எவ்வளவு பெரிய போராட்டம் வெடித்தாலும் அதைச் சமாளிக்க அவர்களால் முடியும் (சமாளித்தும் இருக்கிறார்கள்),
1945க்குப் பிறகு உலகம் முழுதுமே எழுந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மனநிலையும், போருக்கு முன்பு வரை உலகின் தலைவனாக இருந்த ப்ரிட்டன் போருக்குப் பின்னால் அந்த இடத்தை அமெரிக்காவிடமும், ரஷ்யாவிடமும் இழந்ததோடு பொருளாதார ரீதியாக சந்தித்த இழப்புகளும் ப்ரிட்டனை தன்னுடைய நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தூண்டியிருக்கலாம்.
மிக மிக முக்கியமாக ஆசிய ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் மக்களுக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுப்பதும் அவர்களை ஆள்வதும் தங்களுடைய கடமை என்ற தங்களுடைய எண்ணம் முட்டாள்த்தனமானது என்று ப்ரிட்டானியர்கள் உணர்ந்திருக்கலாம்.
மொத்தத்தில் நம்முடைய தலைவர்கள் மக்களை ஒருங்கிணைத்துப் போராடினார்கள், மக்களும் துணிவுடன் அரசை எதிர்த்து நின்றார்காள், ஆனால் இவை விடுதலை பெறப் போதுமானதாக இல்லை.
எனவே நமக்கு மற்ற ஆசிய நாடுகளைப் போலவே விடுதலை தரப்பட்டது என்று முடிவு செயலாம்.
அதே நேரத்தில் போராடி விடுதலை பெறுவது என்றால் என்ன என்று அமெரிக்க விடுதலை வரலாற்றைப் படித்தால் புரியும். அங்கே அவர்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை, அரசுக்கு எதிராக கோஷம் போடவில்லை, ஆயுதம் தூக்கினார்கள்; வெற்றி பெற்றார்கள். அது தான் உண்மையான விடுதலைப் போராட்ட வரலாறு.
நம்முடைய விடுதலை "கொடுக்கப்பட்டது" தானே தவிர "எடுக்கப்பட்டது இல்லை" என்கிற வலி தரக்கூடிய உண்மையை நாம் வேதனையுடன் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
உங்களில் சிலருக்கு இந்தப் பதிவில் சொல்லப்பட்ட கருத்துகளுடன் முரண்பாடு இருக்கலாம், தங்களுடைய மாறுபட்ட கருத்துகளை வரவேற்கிறேன்......
No comments:
Post a Comment